தெய்வ நம்பிக்கை என்பது ஒருபுறம் இருந்தால்கூட உங்களிடத்தே உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்கு எதிலும் வெற்றி கிடைப்பது அரிது. - விவேகானந்தர்....... ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களே ஒழிய தம்மை மாற்றி கொள்ள நினைப்பதில்லை- லியோ டால்ஸ்டாய்.

Wednesday, 29 February 2012

தெரிந்து கொள்வோம் தமிழர் என பெருமை கொள்வோம்


தெரிந்து கொள்வோம் தமிழர் என பெருமை கொள்வோம் பகுதியில் இன்று பார்க்க இருப்பது கல்லணை பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை../>

2 கருத்துரைகள்:

மாசிலா said...

நல்ல தகவல் சார். பகிர்வுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள்.

Anand said...

Nandri......

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More